This Article is From Apr 26, 2019

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் மீது ஆதாரங்களுடன் அரசு கொறடா புகார்!

அதிமுக கட்சி விதிகளை மீறி செயல்படுவதாக சபாநாயகர் தனபாலிடம், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் மீது புகைப்பட ஆதாரங்களுடன் அரசு கொறடா ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Written by

முன்னதாக, இன்று காலை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபால், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோர் ஆலோசனை செய்தனர்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அரசு கொறடா ராஜேந்திரன் கூறும்போது,

அதிமுகவுக்கு எதிராக கட்சி விரோத செயலில், அறந்தாங்கி ரத்தின சபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய 3 சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சிக்கு எதிராகவும், கட்சியை பாதிக்கும் விரோத செயலிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், இவர்கள் மூவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மனுவை சட்டப்பேரவை தலைவரிடம் அளித்துள்ளேன். அவர்கள் மூவர் மீதும் சட்டப்பூர்வமாக உரிய நடவடிக்கை எடுப்பார்.

Advertisement

இதுகுறித்து அளித்து புகார் மனுவில், அவர்கள் மூவரும் எந்தெந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறித்து அவர்களது புகைப்பட ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளோம். தமீமுன் அன்சாரி மீது தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, சபாநாயகர் தரப்பில் விளக்கம் கேட்டு இந்த 3 எம்.எல்.ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

Advertisement


 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement