Read in English
This Article is From Nov 10, 2018

காங்கிரஸ் என்னை பதவி நீக்குவது பற்றி மட்டுமே கனவு காண்கிறது: சிவராஜ் சிங் சவுகான்

தனது அரசாங்கம் சமூகத்தை கவனித்துக் கொண்டிருக்கும்போது, காங்கிரஸ் தன்னை பதவியிலிருந்து நீக்குவது பற்றி மட்டுமே கனவு காண்கிறது என சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா

மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் ’மாமா’ என்று அறியப்படுகிறார்.

Rajgarh (MP):

மத்திய பிரதேசத்தின் முதலமைச்சர் இன்று பேசுகையில், மாநிலத்தின் மக்களின் வாழ்க்கை தரத்தை தான் உயர்த்த முயற்சித்துக் கொண்டிருக்கும் போது, காங்கிரஸ் தன்னுடைய அரசாங்கத்தை அவதிப்பதிலேயே ஈடுபாடு கொண்டுள்ளது. தனது அரசாங்கம் சமூகத்தை கவனித்துக் கொண்டிருக்கும்போது, காங்கிரஸ் தன்னை பதவியிலிருந்து நீக்குவது பற்றி மட்டுமே கனவு காண்கிறது என்றார்.

ராஜ்கர் மாவட்டத்தில் குண்டாலியா அணையை கட்டியுள்ளோம் மற்றும் டீர்த் தர்ஷன் யோஜ்னா எனப்படும் முதியோர்களுக்கான திட்டம் போன்ற முன்னேற்ற திட்டங்களை உருவாக்கியுள்ளோம். இருப்பினும் இதுபோன்ற திட்டங்கள் மீது காங்கிரஸ் தங்களுடைய வெறுப்பை மட்டுமே காட்டுவதாக சவுகான் தெரிவித்தார்.

ராஜ்கர் மாவட்டத்தில் நவம்.28 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் தமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேரணியில் கலந்து கொண்டார். ராஜ்கர் மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியும் பாசன வசதிகளால் நிரப்பட்டுவருகிறது.

Advertisement

வயது முதிர்ந்த பெற்றோர்களை புனித யாத்திரைக்கு அனுப்பி வைக்கிறேன். மகன் மற்றும் மகள்களுக்கு நல்ல கல்வி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். பெண் குழந்தைகள் பிறந்ததும் அவர்களின் பெயரில் ஒரு தொகை வங்கிகளில் போடப்படுகிறது.

பெண்களின் வலியை நான் உணர்வேன். ஆனால், காங்கிரஸ் இது போன்ற திட்டங்கள் மூலம் கோபமே அடைகிறது. காங்கிரஸ் கட்சி பாஜக அரசு செய்யும் வேலைகளை ஏற்க மறுப்பதில் மட்டுமே ஆர்வம் கொள்கிறது என்றார்.

Advertisement
Advertisement