Read in English বাংলায় পড়ুন
This Article is From Feb 15, 2019

‘அரசோடு துணை நிற்போம், வேறு எந்த விவாதமும் இல்லை!- ராகுல் காந்தி பளீச்

முன்னதாக மூத்த மத்திய அமைச்சர்களுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார்

Advertisement
இந்தியா
New Delhi:

ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமாவில், தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் நாங்கள் அரசோடு துணை நிற்போம். அதைத் தவிர இதில் பேச மற்றும் விவாதிக்க ஒன்றுமில்லை' என்று தெரிவித்துள்ளார். 

புல்வாமா மாவட்டத்தின் கோரிபோரா பகுதியில் துணை ராணுவத்தினரின் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் தனது காரில் 350 கிலோ எடை கொண்ட வெடி பொருட்களுடன், ரிசர்வ் போலீஸ் சென்று கொண்டிருந்த பஸ் மீது மோதினார்.

இதில் பேருந்து வெடித்துச் சிதறியதில் ஏராளமான வீரர்கள் உயிரிழந்தனர். முதலில் 8 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியானது. பின்னர் 10, 12, 25 என அதிகரித்து தற்போது 40 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

ராகுல் காந்தி இச்சம்பவம் குறித்து பேசுகையில், ‘இது மிகப் பெரிய துயர சம்பவம். நமது ராணுவ வீரர்களுக்கு எதிராக இப்படியொரு தாக்குல் நடந்திருப்பது கொடூரமானது. ராணுவ வீரர்களுடன் நாங்கள் அனைவரும் துணை நிற்கிறோம். எந்த சக்தியாலும் இந்த தேசத்தை உடைக்க முடியாது. 

இந்த விவகாரத்தில் மத்திய அரசோடு நாங்கள் துணை நிற்போம். அதைத் தவிர இந்த விவகாரத்தில் பேச ஒன்றுமில்லை' என்று திட்டவட்டமாக தெரிவித்தார். 

Advertisement

முன்னதாக மூத்த மத்திய அமைச்சர்களுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், ‘இந்தத் தாக்குதலை நடத்தியதன் மூலம் தீவிரவாதிகள் மிகப் பெரிய தவறு செய்துள்ளார்கள். அவர்கள் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருந்தாலும் அவர்கள் நீதிக்கு முன்னர் நிறுத்தப்படுவர்' என்று சூளுரைத்தார்.

 

Advertisement

மேலும் படிக்க -‘மிகப் பெரிய தவறிழைத்துவிட்டார்கள்!'- தீவிரவாதிகளை எச்சரிக்கும் மோடி

Advertisement