Read in English
This Article is From Dec 17, 2018

சீக்கியர்களுக்கு எதிரான 1984 கலவரம்: காங்., நிர்வாகி குற்றவாளி என தீர்ப்பு!

1984 ஆம் ஆண்டு, சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த, காங்கிரஸின் சஜ்ஜன் குமார், குற்றவானி என நீதிமன்றம் தீர்ப்பு

Advertisement
இந்தியா

1984 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் 2,800 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்

New Delhi:

கடந்த 1984 ஆம் ஆண்டு, சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த, காங்கிரஸ் நிர்வாகி சஜ்ஜன் குமார், குற்றவாளி என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் கீழ்நிலை நீதிமன்றம் ஒன்று சஜ்ஜன் குமாரை விடுவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லி நீதிமன்றம் தீர்ப்பை வாசிக்கும் போது, 'கலவர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் மூலம் ஆறுதல் கிடைக்கும். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், அரசியல் அதிகாரத்தில் திளைத்து வந்தனர். ஆனால், அச்சுறுத்தல் எதற்கும் அஞ்சாமல் வழக்கை தீர்க்கமாக முன்னெடுத்துச் சென்ற ஜகதீஷ் கவுரை நாங்கள் பாராட்டுகிறோம். 

சஜ்ஜன் குமார், டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் சரணடைய வேண்டும். கலவரத்தின் போது நடந்த சம்பவங்கள் பல மட்டங்களில் இன்னும் பிரதிபலிக்கின்றன' என்றது.

இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தியை, அவரது சீக்கிய பாதுகாவலர்கள், 1984 ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றனர். இதையடுத்து சீக்கியர்கள் கண்மூடித்தனமாக கொல்லப்பட்டனர். அப்போது நடந்த கலவரத்தில் 2,800 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். டெல்லியில் மட்டும் 2,100 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

Advertisement

 

Advertisement