Read in English
This Article is From Feb 13, 2019

பிரதமர் மோடி போல மிமிக்ரி செய்த ராகுல் காந்தி; ஆர்ப்பரித்த தொண்டர்கள்!

உத்தர பிரதேசத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டம் ஒன்றில் பேசிய அதன் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி போல மிமிக்ரி செய்துள்ளார்.

Advertisement
இந்தியா Posted by

உத்தர பிரதேசத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டம் ஒன்றில் பேசிய அதன் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி போல மிமிக்ரி செய்துள்ளார். அவர் மோடியை போல பேசியதைக் கண்டு அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பரித்துள்ளனர். 

காங்கிரஸ் பொதுச் செயலாளரும், கிழக்கு உத்தர பிரதேச பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி நேற்று லக்னோவில் சாலை பேரணி மேற்கொண்டார். இந்தப் பேரணியில் ராகுல் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேரணி முடிவில் ராகுல் பேசினார். 

அப்போது திடீரென்று, தனது உடலை குறுக்கிக் கொண்டு ராகுல், ‘மோடிஜி, முன்னர் இப்படித்தான் பேசுவார்' என்று அவரைப் போல குரல் மாற்றிப் பேசினார். தொடர்ந்து மார்பகங்களை நிமித்தியபடி, ‘இப்போது இப்படித்தான் மோடிஜி பேசுகிறார்' என்று கேலி செய்தார். ராகுலின் இந்த தடாலடி மிமிக்ரியைப் பார்த்து காங்கிரஸ் தொண்டர்கள் சந்தோஷத்தில் அரங்கம் அதிர கோஷமிட்டனர். 

Advertisement

தொடர்ந்து அவர் மோடிபோல, ‘எனக்கு அனில் அம்பானி யார் என்றே தெரியாது. அவரிடம் நான் 20,000 கோடி ரூபாயை கொடுக்கவில்லை' என்றார் ராகுல். 

பிரதமர் மோடி போல ராகுல் பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த வாரம் போபாலில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்திலும் மோடி போல பேசி அசத்தினார் ராகுல். அதற்கு முன்னர் மத்திய பிரதேச தேர்தல் பிரசாரத்திலும் பேசினார். மோடியும் 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது, ராகுல் போல மிமிக்ரி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement

மேலும் படிக்க -"நாடும் நமதே… 40-ம் நமதே…”- காங்., செயல் தலைவர் Dr. K. ஜெயக்குமார்

Advertisement