This Article is From Apr 08, 2019

வெறிச்சோடிய விருதுநகர் பிரசாரக் கூட்டம்... படம்பிடித்த பத்திரிகையாளரை தாக்கிய காங். தொண்டர்கள்!

காங்கிரஸ் கட்சியினர் மக்களிடையே தேர்தல் அறிக்கையை விளக்குவதற்கு ஒரு பொது பிரசாரத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இந்தக் கூட்டத்திற்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி  தலைமை தாங்கினார். 

Advertisement
தமிழ்நாடு Posted by

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டங்களில் காலி சேர்களை படம் பிடித்த பத்திரிகையாளரை தாக்கியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் நடந்த பொதுமக்கள் பேரணியில் காலி நாற்காலிகளைப்  படம் பிடித்த பத்திரிக்கையாளரை அடித்து விரட்டியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியினர் மக்களிடையே தேர்தல் அறிக்கையை விளக்குவதற்கு ஒரு பொது பிரசாரத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இந்தக் கூட்டத்திற்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி  தலைமை தாங்கினார். 

சில பத்திரிகையாளர்கள் அங்கிருந்த காலி நாற்காலிகளை படம் பிடித்தனர். இதைப் பார்த்து கோபமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் பத்திரிகையாளரைத் தாக்கினர்.  

Advertisement

ஏப்ரல் 18 அன்று நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கான வாக்கு எண்ணிக்கை மே 23  நடைபெறும்

Advertisement