This Article is From Dec 24, 2019

“அந்த பயம் இருக்கட்டும்!”- Periyar பற்றி சர்ச்சை கிளப்பிய BJP; முடித்துவைத்த மு.க.ஸ்டாலின்!

Periyar - “பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது தமிழக பாஜக"

“அந்த பயம் இருக்கட்டும்!”- Periyar பற்றி சர்ச்சை கிளப்பிய BJP; முடித்துவைத்த மு.க.ஸ்டாலின்!

Periyar - "மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்!"

Periyar - பகுத்தறிவு பகலவன் என்றும் திராவிட சித்தாந்தத்தின் ஆசானாகவும் பார்க்கப்படுகின்ற ஈ.வே.ராமசாமி என்னும் பெரியாரின் நினைவு தினம் இன்று. இதையொட்டிப் பல்வேறு பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பெரியாரின் நினைவைப் போற்றும் வகையில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக, தனது ட்விட்டர் பக்கத்தில் பெரியாரின் நினைவு தினத்தையொட்டி சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை இட்டிருந்தது. 

c5b11mm

Add image caption here

“மணியம்மையின் தந்தை ஈவே.ராமசாமியின் நினைவு தினமான இன்று!!

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்து, போக்ஸோ (Pocso) குற்றவாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க இன்று உறுதிகொள்வோம்,” என்று தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

இந்தப் பதிவிற்குப் பரவலான எதிர்ப்புகள் கிளம்பவே, அதை நீக்கிவிட்டது பாஜக. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது தமிழக பாஜக. அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே? அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்! அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா?,” என்று பதிலடி கொடுத்துள்ளார். 


 

.