This Article is From Aug 12, 2020

சென்னையில் கொரோனா தொற்று: ஆகஸ்ட் 12 ஆம் தேதி நிலவரம் என்ன?

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 97,574 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Edited by

மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 117 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

Highlights

  • சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 88% பேர் மீண்டு வந்துள்ளனர்
  • சென்னையில் ஒருநாள் பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது
  • சென்னையில் டிஸ்சார்ஜ் விகிதம் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது

தமிழகத்தில் நேற்று 5,834 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 986 பேர். ஒட்டுமொத்த அளவில் 3,08,649 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 6,005 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 2,50,680 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 52,810 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 118 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 5,159 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (12.08.2020) வருமாறு:

Advertisement

திருவொற்றியூர் - 342

மணலி - 117

Advertisement

மாதவரம் - 432

தண்டையார்பேட்டை - 636

Advertisement

ராயபுரம் - 752

திரு.வி.க நகர் - 718

Advertisement

அம்பத்தூர் - 1,717

அண்ணா நகர் - 1,174

Advertisement

தேனாம்பேட்டை - 684

கோடம்பாக்கம் - 1,353

வளசரவாக்கம் - 817

ஆலந்தூர் - 550

 அடையாறு - 950

பெருங்குடி - 440

சோழிங்கநல்லூர் - 442

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 6

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 97,574 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 88 சதவீத மீட்பு விகிம் ஆகும். 2,350 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 11,130 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 1,108 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 1,717 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்திலும் மற்றும் அண்ணா நகர் மண்டலத்திலும் முறையே 1,353 மற்றும் 1,174 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 117 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.
 

Advertisement