This Article is From Apr 19, 2020

ஏப்ரல் 19-ல் சென்னையில் கொரோனா நிலவரம்- மண்டலம் வாரியாக விவரம்!

ஏப்ரல் 19 ஆம் தேதி, காலை 10 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 228 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படத்  தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement
தமிழ்நாடு Posted by

தமிழகத்தில் நேற்று புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், 365 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 15 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள்.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 228 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சென்னை மாநகராட்சித் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (19.04.2020) வருமாறு:

Advertisement

திருவொற்றியூர் - 5
மணலி - 0
மாதவரம் - 3
தண்டையார்பேட்டை - 20
ராயபுரம் - 73
திரு.வி.க நகர் - 33
அம்பத்தூர் - 0
அண்ணா நகர் - 24
தேனாம்பேட்டை - 19
கோடம்பாக்கம் - 26
வளசரவாக்கம் - 5
ஆலந்தூர் - 3
 அடையார் - 7
பெருங்குடி - 7
சோழிங்கநல்லூர் - 2
மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1

ஏப்ரல் 19 ஆம் தேதி, காலை 10 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 228 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement