This Article is From Sep 04, 2020

தமிழகத்தில் ஒரே நாளில் 5976 பேருக்கு கொரோனா! சென்னையில் 2வது நாளாக ஆயிரத்திற்கு கீழ் குறைந்த பாதிப்பு!!

தமிழகத்தில் தொடர்ந்து 5 வது நாளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை 6 ஆயிரத்திற்கு குறைவாக உள்ளது.

Advertisement
தமிழ்நாடு Posted by

தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 5,976 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இரண்டாவது நாளாக ஆயிரத்திற்கு கீழ் தொற்று பதிவாகியுள்ளது. 

81,5188  பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,976 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை  4.51 லட்சத்தைக் கடந்துள்ளது. 51,633 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

இறப்புகளின் எண்ணிக்கை பல வாரங்களுக்குப் பிறகு மீண்டும் குறைந்துள்ளது. 89 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.  ஒட்டு மொத்தமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை 7687 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையைப் பொறுத்தவரையில் இரண்டாவது நாளாக ஆயிரத்திற்கு கீழாக நோய்த்தொற்று பதிவாகியுள்ளது. அதாவது, சென்னையில் இன்று 992 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 139720  ஆக உயர்ந்துள்ளது.  ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரையில் 3,92,507 பேர் மீண்டுள்ளனர். 

Advertisement
Advertisement