நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 36 லட்சத்தினை தற்போது கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 78,512 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். 971 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பானது 36,21,246 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 7,81,975 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 27,74,802 பேர் குணமடைந்துள்ளனர். அதே போல 64,469 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பரிசோதனைகளை பொறுத்த அளவில் இதுவரை, 4,23,07,914 மாதிரிகள் நாடு முழுவதும் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 8,46,278 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
Advertisement
COMMENTS
Advertisement