Read in English
This Article is From Sep 18, 2020

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 லட்சத்தினை கடந்தது!

இன்று, தொற்று பாதிப்பில் இரண்டாவது இடத்திற்கு ஆந்திர பிரதேசம் முன்னேறியுள்ளது. நாடு முழுவதும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையானது 8.45 சதவிகிதமாக இருக்கையில், ஆந்திர பிரதேசத்தில் இந்த எண்ணிக்கையானது 12.31 சதவிகிதமாக உள்ளது.

Advertisement
இந்தியா Posted by
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 52 லட்சத்தினை கடந்துள்ளது.

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஒரு நாள் கொரோனா எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 96,424 பேர் கொரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல 1,174  பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 52,14,678 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 84,372 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 10,17,754 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 41,12,552 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதமானது 78.86 சதவிகிதமாக உள்ளது. தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களின் கொரோனா எண்ணிக்கையானது ஒட்டு மொத்த பாதிப்பில் 60 சதவிகிதத்தினை கொண்டுள்ளது. 

Advertisement

மகாராஷ்டிரா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் வரிசையில்  முதல் இடத்தில் உள்ளது. மாநிலத்தில் ஒட்டு மொத்த பாதிப்பானது 11.2 லட்சத்தினை கடந்துள்ளது. இதன் காரணமாக மாநில தலைநகர் மும்பையில் தொற்று தடுப்பு கட்டுப்பாடுகள் இம்மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இன்று, தொற்று பாதிப்பில் இரண்டாவது இடத்திற்கு ஆந்திர பிரதேசம் முன்னேறியுள்ளது. நாடு முழுவதும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையானது 8.45 சதவிகிதமாக இருக்கையில், ஆந்திர பிரதேசத்தில் இந்த எண்ணிக்கையானது 12.31 சதவிகிதமாக உள்ளது.

Advertisement
Advertisement