This Article is From Jun 04, 2020

கொரோனா பாதித்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றமில்லை!!

61 வயதாகும் ஜெ. அன்பழகன் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் ஆவார்.  கடும் மூச்சுத் திணறல்  காரணமாக அவர், குரோம்பேட்டை அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா பாதித்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றமில்லை!!

நேற்று காலையில்  அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது  உறுதி செய்யப்பட்டது.

கொரோனாவால்  பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ.  ஜெ. அன்பழகனுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  கடந்த  24 மணிநேரத்தில் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றம் இல்லை என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. முதலில் சாதாரண ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டுவந்த  நிலையில், தற்போது வென்ட்டிலேட்டர் மூலம்  அவருக்கு சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. 

61 வயதாகும் ஜெ. அன்பழகன் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் ஆவார்.  கடும் மூச்சுத் திணறல்  காரணமாக அவர், குரோம்பேட்டை அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று காலையில்  அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது  உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மருத்துவமனை தரப்பில் அன்பழகனின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

02-06-2016 அன்று ஜெ. அன்பழகன் குரோம்பேட்டை ரிலா மருத்துவமனையில் அனுமதிககப்பட்டார். முதலில் அவருக்கு சாதாரண நிலையில் ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அவருக்கு 80 சதவீத  ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணிநேரமாக ஜெ. அன்பழகனின் உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இவ்வாறு அந்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.