This Article is From Apr 22, 2020

’ஒயிட் அலர்ட்’ போராட்டம்: மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்: அமித் ஷா உறுதி

Coronavirus cases in India: கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் மீது கும்பல் தாக்குதல் நடத்தப்படுவது, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ந்துள்ளது.

’ஒயிட் அலர்ட்’ போராட்டம்: மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்: அமித் ஷா உறுதி

India COVID-19 Cases: மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்: அமித் ஷா உறுதிg.

ஹைலைட்ஸ்

  • மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்: அமித் ஷா உறுதி
  • மருதுத்துவர்களின் பாதுகாப்பிற்காக அவர்களுக்கு பின்னால் அரசு உறுதியாக நிற்
  • ஒயிட் அலர்ட் அடையாள போராட்டம் என்பது ஒரு எச்சரிக்கையே
New Delhi:

மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மருத்துவர்களின் அடையாள போராட்டத்தை கைவிடுமாறும் கேட்டு கொண்டனர்.

கொரோனா வைரஸூக்கு எதிரான போரில் முன்னணி வகிக்கும் சுகாதார பணியாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் 'ஒயிட் அலர்ட்' என்ற அடையாள போராட்டத்திற்கு மருத்துவர்கள் சங்கம் அழைப்பு விடுத்தது. 
இதுபோன்ற தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் இன்று வெள்ளை நிற கோட் அணிந்து, மெழுகுவர்த்தியை ஏந்தி நிற்குமாறு மருத்துவர்கள் அமைப்பு கேட்டுக் கொண்டது. இந்த ஒயிட் அலர்ட் அடையாள போராட்டம் என்பது ஒரு எச்சரிக்கையே என்றும் மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. 

இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ சங்கத்துடன் உரையாடினார். அப்போது, மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக அவர்களுக்கு பின்னால் அரசு உறுதியாக நிற்கும் என்றும் மருத்துவர்களை பாதுகாக்க எல்லாவற்றையும் செய்யும் என்று அமித் ஷா உறுதியளித்தார் என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் மீது கும்பல் தாக்குதல் நடத்தப்படுவது, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ந்துள்ளது. 

சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ நிபுணர்களைப் பாதுகாக்க அவசர அடிப்படையில் ஒரு சட்டத்தை கொண்டு வருமாறு இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியது.

தொடர்ந்து, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால், ஒரு நாள் கறுப்பு தினமாக கடைபிடிக்கப்படும் என்றும் ஏப்.23ம் தேதி கறுப்பு பேட்ஜ்களுடன் மருத்துவர்கள் பணிபுரிவார்கள் என்றும் மருத்துவர் அமைப்பு எச்சரித்தது. 

சென்னையில் நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலஸூக்கு அவரது நோயாளிகளிடமிருந்து, அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு கொண்ட சென்ற போது மக்கள் சிலர் கொரோனா வைரஸ் தங்களுக்கும் பரவும் என்ற அச்சத்தில், மருத்துவரின் உடலை அங்கு அடக்கம் செய்ய விடாமல், தடுத்து நிறுத்தியதோடு, அந்த ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து, அப்பகுதி மக்கள் அவர்கள் மீது கற்கள், பாட்டில்களையும் வீசி தாக்கியுள்ளனர். இதில், ஆம்புலன்ஸ் ஒட்டுநருடன், சில சுகாதாரத்துறை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர். அடுத்தடுத்து, இரண்டு மயானங்களிலும் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சக மருத்துவர் ஒருவரே அவரது உடலை மருத்துவ பணியாளர்களின் உதவியுடன் அடக்கம் செய்துள்ளார். 

இதேபோல், கடந்த வாரம் சென்னை அம்பத்தூரில் கொரோனாவால் உயிரிழந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவரை அந்த இடத்தில் அடக்கம் செய்யக் கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.