கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அமெரிக்காவில் 40-க்கும் அதிகமான இந்தியர்கள் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 1500-க்கும் அதிகமான இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இங்கு சுமார் 5 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இந்தியர்கள் கணிசமான அளவுக்கு வசித்து வருகின்றனர். பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியர்கள் ஆயிரக்கணக்கானோர் அங்கு பணியாற்றுகின்றனர்.
இந்த நிலையில், அங்கு ஏற்பட்டிருக்கும் கொரோனா பாதிப்பு இந்தியர்களையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவில் உயிரிழந்த இந்தியர்களில் 17 பேர் கேரளாவையும், 10 பேர் குஜராத்தையும், 4 பேர் பஞ்சாபையும், 2 பேர் ஆந்திராவையும், ஒருவர் ஒடிசாவையும் சேர்ந்தவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் 60 வயதை தாண்டியவர்கள். ஒரேயொருவருக்கு மட்டும் 21 வயது ஆகிறது.
'இதுபோன்ற மோசமான நிலையை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை' என்று நியூ ஜெர்ஸியில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் பவேஷ் தாவே கூறியுள்ளார்.
நியூ ஜெர்ஸி மாகாணத்தில் சுமார் 400 இந்தியர்களுக்கும், நியூயார்க்கில் ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்களுக்கும் கொரோனா பாதிப்பை ஏற்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனை தருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவரின் பிளாஸ்மா செல்களை, பாதிப்பு இருப்பவருக்கு செல்லுத்தும் போது அவர் குணம் அடைய அதிக வாய்ப்புகள் உள்ளன. இதன் அடிப்படையில் குணம் அடைந்தவர்கள் பிளாஸ்மா செல்களை தானமாக வழங்க வேண்டும் என்று அமெரிக்காவில் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
மலேரியா காய்ச்சலுக்கு அளிக்கப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகளை அமெரிக்காவுக்கு இந்தியா வழங்கியுள்ளது. இதன்பின்னர் ட்விட் செய்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கண்ணுக்கு தெரியாத எதிரி விரைவில் வீழ்த்தப்படுவார் என்று கூறியுள்ளார்.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)