சர்வதேச அளவில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்தினை கடந்திருக்கக்கூடிய சூழலில் காசநோய்க்கு தடுப்பூசியாகப் பயன்படுத்தப்படும் பி.சி.ஜி என அழைக்கப்படும் பேசில் கால்மெட்-குயரின் தடுப்பு மருந்து புதிய நம்பிக்கையை கொரோனா தொற்று மரணத்திற்கு எதிரான கொடுத்திருப்பதாக புதிய ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது சம்பந்தமான ஆய்வுகளை விஞ்ஞானிகள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச அளவில் காசநோயை கட்டுப்படுத்த 1920 பி.சி.ஜி என அழைக்கப்படும் பேசில் கால்மெட்-குயரின் தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் 1948-ல் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இக்காலகட்டங்களில் இந்தியாவில் காசநோயால் மக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த தடுப்பு ஊசியினை எடுத்துக்கொண்ட குழந்தைகள் மட்டுமல்லாமல், சராசரி வயதினை எட்டியிருந்த மனிதர்கள் பெரும்பாலும் கொரோனா தொற்றினால் ஏற்படும் மரணத்தில் குறைந்த சதவிகிதமாகவே இருப்பதாக பல்வேறு ஆராய்சி சான்றுகள் கூறுவதாக, சிறுநீரக புற்றுநோயியல் (அறுவை சிகிச்சை) பேராசிரியர் ஆஷிஷ் காமத் குறிப்பிட்டுள்ளார். இவர் ஹூஸ்டனில் உள்ள எம்.டி. ஆண்டர்சன் புற்றுநோய் மையத்தின் ஆராய்ச்சியாளரும் ஆவார். பி.சி.ஜி பயன்படுத்தப்படும் நாடுகளில் கொரோனாதொற்று பரவலின் பாதைகள் மாறியுள்ளதா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பி.சி.ஜி தடுப்பூசிகளை பிரயோகித்த நாடுகளில் கொரோனா தொற்று விகிதம் ஒரு மில்லியனுக்கு 38.4 சதவிகிதமாகவும், இந்த தடுப்பூசியினை எடுத்துக்கொள்ளாத நாடுகளில் தொற்று விகிதம் 358.4 ஆக இருப்பதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல கொரோனா தொற்று விகிதம், தடுப்பூசி பயன்படுத்தப்படும் நாடுகளில் ஒரு மில்லியனுக்கு 4.28 என்கிற விகிதத்திலும், பயன்படுத்தப்படாத நாடுகளில் ஒரு மில்லியனுக்கு 40 என்கிற விகிதத்தில் காணப்படுகின்றதாக இந்த ஆய்வு குறிப்பிடுகின்றது.
அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகள் இந்த தடுப்பூசியை பரவலாக பயன்படுத்தாததினால் கடுமையான பாதிப்புகளை சந்தித்திருக்கின்றது. "பி.சி.ஜி தடுப்பூசி மூலம் இந்திய மக்களுக்கு வழங்கப்படும் நன்மைதான் சாதகமான செய்தி, ஆனால் நாங்கள் இவை மட்டுமே வைத்து மனநிறைவுடன் இருக்க முடியாது" என்று டாக்டர் காமத் என்டிடிவிக்கு தெரிவித்தார்.
இந்த தடுப்பூசியானது நேரடியாக காசநோய் வைரஸ்களை தாக்காமல் இயல்பில் மனித உடலில் நோய் எதிரப்புத் திறனை அதிகரிக்க செய்யும் தன்மைக் கொண்டது. இது காசநோய் மட்டுமல்லாது இதர தொற்றுகளை எதிர்க்கும் நோய்யெதிரப்புத் தன்மையை உடலில் வளர்த்தெடுக்கின்றது.
ஆனால் இந்திய மருத்துவர்கள் எந்தவொரு மருத்துவ இறுதி முடிவுகளுக்கும் முன்னர் "பெரிய அளவிலான தொற்றுநோயியல் ஆய்வுகள்" தேவை என்று கூறுகிறார்கள்.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|