சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2,145 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
- சென்னையில் கொரோனோவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது ராயபுரம்
- மணலி மண்டலத்தில் மிகக் குறைவான கொரோனா பாதிப்பு உள்ளது
தமிழகத்தில் நேற்று 646 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 509 பேர். ஒட்டுமொத்த அளவில் 17,728 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 611 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 9,342 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 9 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 127 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள்.
சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (26.05.2020) வருமாறு:
திருவொற்றியூர் - 344
மணலி - 156
மாதவரம் - 256
தண்டையார்ப்பேட்டை - 1,160
ராயபுரம் - 2,145
திரு.வி.க நகர் - 1,285
அம்பத்தூர் - 484
அண்ணா நகர் - 975
தேனாம்பேட்டை - 1,262
கோடம்பாக்கம் - 1,525
வளசரவாக்கம் - 758
ஆலந்தூர் - 157
அடையாறு - 653
பெருங்குடி - 203
சோழிங்கநல்லூர் - 197
மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 80
மே 27 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 11,640 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2,145 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்திலும், திரு.வி.க நகர் மண்டலத்திலும் முறையே 1,525 மற்றும் 1,285 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 156 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.