This Article is From May 27, 2020

சென்னையில் குறையாத கொரோனா தொற்று விகிதம்: மண்டல வாரியாக அப்டேட்!

மே 27 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 11,640 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Written by

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2,145 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Highlights

  • தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
  • சென்னையில் கொரோனோவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது ராயபுரம்
  • மணலி மண்டலத்தில் மிகக் குறைவான கொரோனா பாதிப்பு உள்ளது

தமிழகத்தில் நேற்று 646 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 509 பேர். ஒட்டுமொத்த அளவில் 17,728 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 611 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 9,342 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 9 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 127 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (26.05.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 344

Advertisement

மணலி - 156

மாதவரம் - 256

Advertisement

தண்டையார்ப்பேட்டை - 1,160

ராயபுரம் - 2,145

Advertisement

திரு.வி.க நகர் - 1,285

அம்பத்தூர் - 484

Advertisement

அண்ணா நகர் - 975

தேனாம்பேட்டை - 1,262

Advertisement

கோடம்பாக்கம் - 1,525

வளசரவாக்கம் - 758

ஆலந்தூர் - 157

 அடையாறு - 653

பெருங்குடி - 203

சோழிங்கநல்லூர் - 197

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 80

மே 27 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 11,640 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2,145 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்திலும், திரு.வி.க நகர் மண்டலத்திலும் முறையே 1,525 மற்றும் 1,285 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 156 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

Advertisement