கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வரும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் பணிகளையும் அரசு துவங்கியுள்ளது. இதன்படி நாளை மறுதினமான ஏப்ரல் 20-ம்தேதி முதல் குறிப்பிட்ட சில தொழில்கள் மீண்டும் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதித்துறை, ஆயுஷ் உள்ளிட்ட அனைத்து துறைகளின் சேவைகள் நாளை மறுதினம் முதல் தொடங்குகின்றன. ஆனால், கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கும்.
நாளை மறுதினம் முதல் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் சேவைகள், தொழில்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி கீழ்க்கண்டவை நாளை மறுதினம் முதல் மீண்டும் செயல்பாட்டிற்கு வருகின்றன.
- ஆயுஷ் உள்பட அனைத்து மருத்துவ சேவைகளை மீண்டும் தொடங்கிக் கொள்ளலாம்
- அனைத்து வேளாண் தொழில்கள் மற்றும் தோட்டத் தொழில்கள்
- மீன்பிடித் தொழில்
- தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழில்கள் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.
- நிதித்துறை முழுவதுமாக செயல்பாட்டுக்கு வரும்
- சமூக நலத்துறை
- சமூக விலகலைக் கடைபிடித்து, மாஸ்க் அணிந்து தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாளர்கள் வேலைபார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- பொது விநியோகத்துறை
- மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் இடையே சரக்குகளை கொண்டு செல்ல அனுமதி
- ஆன்லைனில் கற்பித்தல், தொலை தூரக் கல்விக்கு அனுமதி
- அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்
- வர்த்தக மற்றும் தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி
- கட்டிடத் தொழில்கள் இயங்க அனுமதி
- அரசு மற்றும் தனியார் தொழில்துறைகள் செயல்பட அனுமதி.
- தனியார் வாகனங்களை அவசர தேவைக்காக இயக்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து மத்திய, மாநில, யூனியன் பிரதேச அலுவலகங்கள் செயல்படத் தொடங்கும்.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|