உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு முடக்க நடவடிக்கையை அறிவிக்கவில்லையெனில், ஏப்ரல் 15 தேதிக்குள் நாட்டில் ஒட்டுமொத்தமாக 8.2 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 130 கோடி மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் ஏப்ரல் 11 அன்று 2.08 லட்சம் மக்கள் கொரோனாவுக்கு ஆளாகியிருப்பார்கள். இது அடுத்தக்கட்டத்திற்கு சென்று ஏப்ரல் 15 அன்று 41 சதவிகிதம் நோய்த் தொற்று அதிகரித்து 8.2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இவையெல்லாம் மத்திய அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையான முழு முடக்க நடவடிக்கை காரணமாக தடுக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சின் மிக மூத்த அதிகாரிகளில் ஒருவரான லாவ் அகர்வால் சனிக்கிழமை கூறியிருந்தார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை போல இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயரவில்லை. ஆனால், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிறிய அளவில் அதிகரித்து வருகின்றது.
இதுவரை 273 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். 8,000க்கும் அதிகமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை மட்டும், 34 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலைமைக்கு மக்கள் கடைப்பிடித்துவரும் சமூக விலகல் முக்கியக் காரணம் என்றும் மேலும், அரசு முழு முடக்க (LOCKDOWN) நடவடிக்கையோடு சேர்த்து, இதர கட்டுப்பாட்டு நடவடிக்கையையும் மேற்கொண்டதன் விளைவே தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதற்கு காரணம் என்றும் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி இந்த முழு முடக்க நடவடிக்கையை கொரோனா பரவலைத் தடுக்க 21 நாட்களுக்கு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். அதில் ஏப்ரல் 30 வரை இந்த முழு முடக்க நடவடிக்கை அமலில் இருக்க வேண்டும் என பல முதல்வர்கள் பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பிரதமருடன் கலந்துரையாடிய பின்னர் மகாராஷ்டிராவும் தெலுங்கானாவும் ஏப்ரல் 30 வரை தங்கள் மாநிலங்களில் ஊரடங்கு தொடர விரும்புவதாக தெரிவித்தன.
(With inputs from PTI)
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|