This Article is From Jul 15, 2020

தமிழகத்தில் 1.5 லட்சத்தை கடந்தது கொரோனா! இன்று 4,496 பேருக்கு பாதிப்பு!!

ஒட்டு மொத்த உயிரிழப்பு 2,167 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 47,340 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement
தமிழ்நாடு Written by

Highlights

  • தமிழகத்தில் கொரோனா 1.50 லட்சத்தினை கடந்துள்ளது
  • இன்று 4,496 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
  • இன்று மட்டும் 5,000 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 1.50 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 39,715 மாதிரிகளில் 4,496 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 1,51,820 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 5,000 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 1,02,310 ஆக அதிகரித்துள்ளது. இன்று 68 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 2,167 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 47,340 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement