This Article is From Jul 24, 2020

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா!

சென்னையை பொறுத்த அளவில் 21வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 6,785 பேரில் 1,299 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா!

ஹைலைட்ஸ்

  • இன்று 6,785 பேருக்கு கொரோனா தொற்று
  • ஒட்டு மொத்த பாதிப்பு 1,99,749 ஆக அதிகரித்துள்ளது.
  • ஒட்டு மொத்த உயிரிழப்பு 3,320 ஆக அதிகரித்துள்ளது

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 1.99 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 63,182 நபர்களில் 6,785 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவாகும். இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 1,99,749 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 6,504 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 1,43,297 ஆக அதிகரித்துள்ளது. இன்று 88 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 3,320 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் 21வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 6,785 பேரில் 1,299 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 92,206 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 1,969 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

.