This Article is From Jul 25, 2020

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,988 பேருக்கு கொரோனா!

சென்னையை பொறுத்த அளவில் 22வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 6,988 பேரில் 1,329 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 93,537 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement
தமிழ்நாடு Posted by

Highlights

  • இன்று 6,988 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு
  • ஒட்டு மொத்த பாதிப்பு 2,06,737 ஆக அதிகரித்துள்ளது
  • இன்று மட்டும் 7,758 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 2 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 61,729 நபர்களில் 6,988 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவாகும். இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 2,06,737 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 7,758 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 1,51,055 ஆக அதிகரித்துள்ளது. இன்று 89 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 3,409 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,273 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் 22வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 6,988 பேரில் 1,329 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 93,537 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 1,989 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement
Advertisement