This Article is From Jul 27, 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,989 பேருக்கு கொரோனா! 85 பேர் உயிரிழப்பு!!

சென்னையை பொறுத்த அளவில் 23வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 6,989 பேரில் 1,155 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,989 பேருக்கு கொரோனா! 85 பேர் உயிரிழப்பு!!

ஹைலைட்ஸ்

  • இன்று 6,989 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு
  • ஒட்டு மொத்த பாதிப்பு 2,13,723 ஆக அதிகரித்துள்ளது
  • இன்று மட்டும் 5,471 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 2.13 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 62,305 நபர்களில் 6,989 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 2,13,723 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 5,471 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 1,56,526 ஆக அதிகரித்துள்ளது. இன்று 85 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 3,494 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் 23வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 6,989 பேரில் 1,155 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 94,695 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,011பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

.