This Article is From Aug 15, 2020

தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 127 பேர் உயிரிழப்பு! 5,860 பேருக்கு தொற்று!!

சென்னையை பொறுத்த அளவில் இன்று 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,860 நபர்களில் 1,179 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 127 பேர் உயிரிழப்பு! 5,860 பேருக்கு தொற்று!!

ஹைலைட்ஸ்

  • இன்று கொரோனா எண்ணிக்கை 5,860
  • தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 3,32,105 ஆக அதிகரித்துள்ளது.
  • இன்று மட்டும் 5,236 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 3.32 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 71,343 மாதிரிகளில் 5,860 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 17வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 3,32,105 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 5,236 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,72,251 ஆக அதிகரித்துள்ளது. இன்று 127 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த 11வது நாளாக இன்றும் 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 5,641 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 54,213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் இன்று 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,860 நபர்களில் 1,179 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,15,444 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,434 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

.