This Article is From Sep 11, 2020

தமிழகத்தில் 4.91 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,519 பேருக்கு தொற்று!!

இன்று மட்டும் 6,006 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,35,422 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் 4.91 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,519 பேருக்கு தொற்று!!

தற்போது 47,918 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4.91 லட்சத்தினை கடந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்ட 84,893 பேரின் மாதிரிகளில் 5,519 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 57,15,216 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இன்று 77பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 8,231 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,519 பேரில் 3,324 பேர் ஆண்களும், 2,195 பேர் பெண்களாவார்கள். இதுவரை 2,96,478 ஆண்களும், 1,95,064 பெண்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

தமிழகம் முழுவதும் தற்போது பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையானது 165 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று மட்டும் 6,006 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,35,422 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது 47,918 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

.