This Article is From Sep 12, 2020

தமிழகத்தில் 50 லட்சத்தினை நெருங்கியது கொரோனா பாதிப்பு! இன்று 5,495 பேர் பாதிப்பு!!

இன்று மட்டும் 6,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,41,649 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் 50 லட்சத்தினை நெருங்கியது கொரோனா பாதிப்பு! இன்று 5,495 பேர் பாதிப்பு!!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4.97 லட்சத்தினை கடந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்ட 88,562 பேரின் மாதிரிகளில் 5,495 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 58,03,778 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இன்று 76 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 8,307 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,495 பேரில் 3,313 பேர் ஆண்களும், 2,182 பேர் பெண்களாவார்கள். இதுவரை 2,99,791 ஆண்களும், 1,97,246 பெண்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

தமிழகம் முழுவதும் தற்போது பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையானது 167 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இன்று மட்டும் 6,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,41,649 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது 47,110 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

.