மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினர் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை விமான நிலையத்தில் துணை ராணுவமான மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (CISF) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் ஒருவருக்கு கடந்த 27-ம்தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட வீரருடன் மொத்தம் 11 பேர் தொடர்பிலிருந்தனர். இதையடுத்து முன்னெச்சரிக்கையாக அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று விமான நிலையத்தில் மொத்த பாதுகாப்பில் ஈடுபட்ட 152 துணை ராணுவத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடமும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதன் முடிவுகள் தெரியவந்த பின்னர், தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள் என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் துணை ராணுவ வீரருக்கு 2-வது முறையாக பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. இதேபோன்று தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் 9 பேரும் தொற்றிலிருந்து மீள்வார்கள் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விதிகளை கடைப்பிடித்து, சமூக விலகலில் இருக்க வேண்டும் என்று வீரர்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை அறிவுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் 423 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 235 பேர் மும்பையை சேர்ந்தவர்கள்.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|