Read in English
This Article is From Apr 24, 2020

11 குடும்பங்களிலிருந்து 46 பேர் கொரோனாவால் பாதிப்பு! டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!!

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 128 பேர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களாக புதியதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

Advertisement
இந்தியா Posted by
New Delhi:

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,000ஐ கடந்திருக்கக்கூடிய நிலையில், தலைநகர் டெல்லியில் 2248 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது வடக்கு டெல்லியின் ஜஹாங்கிர் பூரியில் 46 பேரும், பழைய டெல்லியில் உள்ள ஒரு குடும்பத்தில் 11 பேரும் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 128 பேர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களாக புதியதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

ஜஹாங்கிர் பூரியில் 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், அதற்கு அருகில் மற்றொரு பகுதியில் ஒரு குழந்தை உட்பட 31 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மட்டுமல்லாமல் இப்பகுதியில் பாதுகாப்புப் பணியிலிருந்த 6 காவலர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Advertisement

இதே பகுதியில் சமீபத்தில் ஒரு குடும்பம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள மூன்று தெருக்களிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏற்கெனவே சீல் வைக்கப்பட்ட இப்பகுதியில் தற்போது 46 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என டெல்லி வடக்கு பகுதியின் குற்றவியல் நீதிபதி தீபக் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

இதே போல பழைய டெல்லியின் ஜமா மஸ்ஜித் அருகே கட்டுப்பாட்டு மண்டலமாக உள்ள ஒரு பகுதியில் இரண்டு மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் எல்.என்.ஜே.பி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இக்குடும்பத்தில் ஒருவர் சமீபத்தில் உஸ்பெகிஸ்தானிலிருந்து திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

சூரிவாலன் பகுதியில் வசிக்கும் 18 குடும்பங்களைப் பரிசோதித்ததில் அதில் 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறாகத் தொடர்ந்து குழுவாகத் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்ட பிறகு கட்டுப்பாட்டு  மண்டலங்களின் கட்டுப்பாடுகள் கூடுதலாக இருக்கம் அடைந்துள்ளன. டெல்லி முழுவதும் 92 கட்டுப்பாட்டு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் இதுவரை பதிவான 50 இறப்புகளில் 27 பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள். இது மொத்த இறப்பில் 52 சதவிகிதமாகும்.

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
Advertisement