தலைநகர் டெல்லியில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தற்போதைய உடனடி தேவை என்பது நிதி அல்ல, என்றும் வைரஸ் பரவலை எதிர்த்து போராடுவதில் முன்னணியில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்கச் செய்வதே என கவுதம் கம்பீருக்கு கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், டெல்லி அரசுக்கு தனது எம்.பி நிதியில் இருந்து கூடுதலாக ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்வதாக கம்பீர் கூறியதை தொடர்ந்து, இருவருக்கும் ட்வீட்டரில் வார்த்தை போர் துவங்கியது.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான கவுதம் கம்பீர் தான் டெல்லி அரசுக்கு அளித்த நிதிகளை ஏற்காததால் கெஜ்ரிவால் அரசுக்கு ஈகோ இருப்பதாக கம்பீர் குற்றம்சாட்டிய நிலையில், கெஜ்ரிவால் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கவுதம் கம்பீர் தனது ட்வீட்டர் பதிவில், முதல்வர் கெஜ்ரிவாலும், துணை முதல்வரும் நிதி தேவை என்று கூறுகிறார்கள். ஆனால், எம்.பிக்கள் நிதியில் இருந்து முன்பே வழங்கிய ரூ.50 லட்சத்தை ஏற்றுக்கொள்ள அவர்களின் ஈகோ அனுமதிக்கவில்லை. நான் மேலும், 50 லட்சம் தருவதாக உறுதியளிக்கிறேன். உடனடியாக தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சோதனை கருவிகளை வாங்குவதற்கு உதவும் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கவுதமின் இந்த பதிவுக்கு ஒரு மணி நேரத்தில் பதில் தெரிவித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதற்கு தனது அரசு தயாராக இருப்பதாகவும் அதனால், கவுதம் அந்த கருவிகள் எங்கு கிடைக்கிறது என்பதை உறுதிப்படுத்தி தெரிவிக்கவும்.
எங்கிருந்ததாவது அவற்றை உடனே கிடைக்கும்படி செய்தால், டெல்லி அரசு அதனை உடனியாக வாங்கிக்கொள்ளும் என்றும், அது தற்போது பெரிதும் உதவும். நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கொரோனாவால் 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|