This Article is From Jul 31, 2020

சென்னையில் கொரோனா: மீண்டும் 1000-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு - ஜூலை 31 மண்டலவாரி விவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 83,890 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Written by

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,613 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

Highlights

  • சென்னையில் தொடர்ந்து 1000 பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது
  • சென்னையில் டிஸ்சார்ஜ் விகிதம் 85% ஆக உள்ளது
  • தமிழகத்திலேயே சென்னைதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் நேற்று 5,864 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,175 பேர். ஒட்டுமொத்த அளவில் 2,39,978 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 5,295 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 1,78,178 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 57,962 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 97 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 3,838 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (31.07.2020) வருமாறு:

Advertisement

திருவொற்றியூர் - 417

மணலி - 141

Advertisement

மாதவரம் - 633

தண்டையார்பேட்டை - 603

Advertisement

ராயபுரம் - 826

திரு.வி.க நகர் - 1,094

Advertisement

அம்பத்தூர் - 1,266

அண்ணா நகர் - 1,362

Advertisement

தேனாம்பேட்டை - 1,025

கோடம்பாக்கம் - 1,613

வளசரவாக்கம் - 978

ஆலந்தூர் - 563

 அடையாறு - 1,167

பெருங்குடி - 479

சோழிங்கநல்லூர் - 466

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 152

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 83,890 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 85 சதவீத மீட்பு விகிம் ஆகும். 2,092 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 12,785 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 1,126 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,613 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து அண்ணா நகர் மண்டலத்திலும் மற்றும் அம்பத்தூர் மண்டலத்திலும்  முறையே 1,362 மற்றும் 1,266 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 141 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 

Advertisement