கொரோனா தொற்று போன்ற சம்பவம் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கக்கூடியது என்று அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகில் தற்போது வரை 1.20 லட்சத்திற்கும் அதிகமானோரை கொரோனா வைரஸ் பலி வாங்கியுள்ளது. இந்த வைரஸ் சீனாவின் வுஹான் நகர சந்தையில் இருந்து பரவியதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகின.
அதேநேரத்தில் இந்த வைரஸ் எப்படி மனிதனுக்கு பரவியது என்ற ஆராய்ச்சியில் அறிவியலாளர்கள் இறங்கியுள்ளனர். இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை விஞ்ஞானி டாக்டர் ராமன் கங்காதர் கூறியதாவது-
கொரோனா வைரஸ்கள் வௌவால்களிடம் இருந்து நேரடியாக மனிதனுக்கு பரவும். அல்லது வௌவால்களிடம் இருந்து எறும்பு திண்ணிக்கு சென்று, அதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்டது.
சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொரோனா வைரஸ் வௌவால்களிடம் இருந்துதான் மனிதருக்கு பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வௌவால்களிடமிருந்து எறும்பு திண்ணிகளுக்கும், அதனிடமிருந்து மனிதனுக்கும் பரவியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
பொதுவாக சில வைரஸ்கள் தாங்கள் தங்கும் மூல உயிரினங்களை அவ்வப்போது மாற்றிக்கொள்ளும். வௌவால்களிடம் இருந்து கொரோனா வைரஸ் மனிதனுக்கு பரவுவது என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபோது, எந்தெந்த உயிரினங்களுக்கு வைரஸை முழு அளவில் மனிதர்களுக்கு கடத்தும் சக்தி உள்ளது என்பதுபற்றி ஆய்வு செய்தோம். அந்த நேரத்தில் 2 வௌவால் இனங்கள் கொரோனா வைரஸை கொண்டிருந்தன. ஆனால் அவைகளுக்கு வைரஸை மனிதர்களுக்கு கடத்தும் திறன் இல்லாமல் இருந்தது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். சீனாவின் வுஹான் சந்தையில் எறும்பு திண்ணிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் மூலமாக கொரோனா வைரஸ் பரவியிருக்கும் என்ற கருத்தும் உள்ளது. ஆனால், எறும்பு திண்ணிகள் கொரோனா வைரஸை வௌவால்களிடம் இருந்து பெற்றிருக்கும் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
உலகம் முழுவதும் 20 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 1.20 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துள்ளது.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|