This Article is From Jul 25, 2020

சென்னையில் கொரோனா வைரஸ்: அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை - ஜூலை 25 ஆம் தேதி நிலவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 76,494 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

சென்னையில் கொரோனா வைரஸ்: அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை - ஜூலை 25 ஆம் தேதி நிலவரம்!

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,189 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

ஹைலைட்ஸ்

  • சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 83% பேர் மீண்டு வந்துள்ளனர்
  • நேற்று மட்டும் 1,110 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்
  • இதுவரை சென்னையில் 1,969 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

தமிழகத்தில் நேற்று 6,785 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,299 பேர். ஒட்டுமொத்த அளவில் 1,99,749 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 6,504 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 1,43,297 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 53,132 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 3,320 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (25.07.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 413

மணலி - 196

மாதவரம் - 407

தண்டையார்பேட்டை - 591

ராயபுரம் - 817

திரு.வி.க நகர் - 1,221

அம்பத்தூர் - 996

அண்ணா நகர் - 1,756

தேனாம்பேட்டை - 1,136

கோடம்பாக்கம் - 2,189

வளசரவாக்கம் - 846

ஆலந்தூர் - 536

 அடையாறு - 1,155

பெருங்குடி - 417

சோழிங்கநல்லூர் - 309

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 758

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 76,494 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 83 சதவீத மீட்பு விகிம் ஆகும். 1,969 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 13,743 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 1,110 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,189 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து அண்ணா நகர் மண்டலத்திலும் மற்றும் திரு.வி.க நகர் மண்டலத்திலும்  முறையே 1,756 மற்றும் 1,221 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 196 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 

.