தமிழகத்தில் நேற்று 4,538 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,243 பேர். ஒட்டுமொத்த அளவில் 1,60,907 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 3,391 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 1,10,807 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 47,782 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 79 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 2,315 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள்.
சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (18.07.2020) வருமாறு:
திருவொற்றியூர் - 527
மணலி - 205
மாதவரம் - 386
தண்டையார்பேட்டை - 816
ராயபுரம் - 1,146
திரு.வி.க நகர் - 1,042
அம்பத்தூர் - 893
அண்ணா நகர் - 1,609
தேனாம்பேட்டை - 1,441
கோடம்பாக்கம் - 2,099
வளசரவாக்கம் - 720
ஆலந்தூர் - 446
அடையாறு - 1,002
பெருங்குடி - 354
சோழிங்கநல்லூர் - 344
மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,890
இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 67,077 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 80 சதவீத மீட்பு விகிம் ஆகும். 1,376 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 14,923 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 1,329 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,099 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து அண்ணா நகர் மண்டலத்திலும் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்திலும் முறையே 1,609 மற்றும் 1,441 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 205 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.