This Article is From Jul 20, 2020

சென்னையில் கொரோனா வைரஸ்: ஜூலை 20 ஆம் தேதி மண்டலவாரி முழு விவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 69,382 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

சென்னையில் கொரோனா வைரஸ்: ஜூலை 20 ஆம் தேதி மண்டலவாரி முழு விவரம்!

சென்னையில் இதுவரை கொரோனா தொற்றால் 1,434 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்

ஹைலைட்ஸ்

  • சென்னையிலேயே கோடம்பாக்கம் மண்டலத்தில் பாதிப்பு அதிகம்
  • மணலி மண்டலத்தில் மிகக் குறைவான கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
  • இதுவரை சென்னையில் 81% பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளனர்

தமிழகத்தில் நேற்று 4,979 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,254 பேர். ஒட்டுமொத்த அளவில் 1,70,693 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 4,059 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 1,17,915 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 50,294 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 78 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 2,481 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (20.07.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 545

மணலி - 255

மாதவரம் - 389

தண்டையார்பேட்டை - 807

ராயபுரம் - 1,033

திரு.வி.க நகர் - 1,009

அம்பத்தூர் - 905

அண்ணா நகர் - 1,586

தேனாம்பேட்டை - 1,316

கோடம்பாக்கம் - 2,119

வளசரவாக்கம் - 723

ஆலந்தூர் - 537

 அடையாறு - 1,085

பெருங்குடி - 355

சோழிங்கநல்லூர் - 389

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,989

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 69,382 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 81 சதவீத மீட்பு விகிம் ஆகும். 1,434 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 15,042 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 1,189 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,119 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து அண்ணா நகர் மண்டலத்திலும் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்திலும்  முறையே 1,586 மற்றும் 1,316 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 255 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 
 

.