This Article is From Jul 27, 2020

சென்னையில் கொரோனா வைரஸ்: இதுவரை பாதிக்கப்பட்ட 83% பேர் டிஸ்சார்ஜ்- ஜூலை 27 ஆம் தேதி நிலவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 78,940 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Written by

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,192 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

Highlights

  • சென்னையில் நேற்று ஒரே நாளில் 1315 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்
  • கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிக ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன
  • மணலி மண்டலத்தில் மிகக் குறைவான கொரோனா பாதிப்பு உள்ளது

தமிழகத்தில் நேற்று 6,986 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,155 பேர். ஒட்டுமொத்த அளவில் 2,13,723 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 5,471 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 1,56,526 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 53,703 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 85 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 3,494 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (27.07.2020) வருமாறு:

Advertisement

திருவொற்றியூர் - 441

மணலி - 196

Advertisement

மாதவரம் - 488

தண்டையார்பேட்டை - 605

Advertisement

ராயபுரம் - 906

திரு.வி.க நகர் - 1,1171

Advertisement

அம்பத்தூர் - 1,100

அண்ணா நகர் - 1,601

Advertisement

தேனாம்பேட்டை - 1,116

கோடம்பாக்கம் - 2,192

வளசரவாக்கம் - 886

ஆலந்தூர் - 538

 அடையாறு - 1,180

பெருங்குடி - 468

சோழிங்கநல்லூர் - 368

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 488

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 78,940 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 83 சதவீத மீட்பு விகிம் ஆகும். 2,011 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 13,744 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 1,315 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,192 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து அண்ணா நகர் மண்டலத்திலும் மற்றும் திரு.வி.க நகர் மண்டலத்திலும்  முறையே 1,601 மற்றும் 1,171 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 196 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 


 

Advertisement