This Article is From Jul 22, 2020

சென்னையில் கொரோனா வைரஸ்: ஜூலை 22 ஆம் தேதி மண்டல வாரியாக தொற்று விவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 71,949 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

சென்னையில் கொரோனா வைரஸ்: ஜூலை 22 ஆம் தேதி மண்டல வாரியாக தொற்று விவரம்!

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,947 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

ஹைலைட்ஸ்

  • சென்னையில் தொடர்ந்து 1000 பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது
  • சென்னையில் கொரோனா மீட்பு விகிதம் 81 ஆக இருக்கிறது
  • சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,298 பேர் டிஸ்சார் செய்யப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் நேற்று 4,965 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,130 பேர். ஒட்டுமொத்த அளவில் 1,80,643 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 4,894 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 1,26,670 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 51,344 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 75 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 2,626 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (22.07.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 488

மணலி - 232

மாதவரம் - 387

தண்டையார்பேட்டை - 771

ராயபுரம் - 1,029

திரு.வி.க நகர் - 1,171

அம்பத்தூர் - 939

அண்ணா நகர் - 1,628

தேனாம்பேட்டை - 1,223

கோடம்பாக்கம் - 1,947

வளசரவாக்கம் - 740

ஆலந்தூர் - 586

 அடையாறு - 1,173

பெருங்குடி - 373

சோழிங்கநல்லூர் - 375

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,890

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 71,949 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 81 சதவீத மீட்பு விகிம் ஆகும். 1,475 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 14,952 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 1,298 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,947 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து அண்ணா நகர் மண்டலத்திலும் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்திலும்  முறையே 1,628 மற்றும் 1,223 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 232 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 

.