This Article is From Aug 01, 2020

சென்னையில் கொரோனா தொற்று: ஆகஸ்ட் 1 ஆம் தேதி மண்டல வாரியாக ஆக்டிவ் கேஸ் விவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 84,916 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

சென்னையில் கொரோனா தொற்று: ஆகஸ்ட் 1 ஆம் தேதி மண்டல வாரியாக ஆக்டிவ் கேஸ் விவரம்!

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,606 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

ஹைலைட்ஸ்

  • சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்ட 85% பேர் மீண்டு வந்துள்ளனர்
  • தற்போது மருத்துவமனைகளில் 12,765 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்
  • சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,026 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் நேற்று 5,881 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,013 பேர். ஒட்டுமொத்த அளவில் 2,45,859 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 5,778 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 1,83,956 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 57,968 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 97 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 3,935 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (01.08.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 400

மணலி - 117

மாதவரம் - 631

தண்டையார்பேட்டை - 587

ராயபுரம் - 812

திரு.வி.க நகர் - 1,050

அம்பத்தூர் - 1,307

அண்ணா நகர் - 1,385

தேனாம்பேட்டை - 1,062

கோடம்பாக்கம் - 1,606

வளசரவாக்கம் - 926

ஆலந்தூர் - 541

 அடையாறு - 1,149

பெருங்குடி - 504

சோழிங்கநல்லூர் - 454

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 234

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 84,916 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 85 சதவீத மீட்பு விகிம் ஆகும். 2,113 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 12,765 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 1,026 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,606 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து அண்ணா நகர் மண்டலத்திலும் மற்றும் அம்பத்தூர் மண்டலத்திலும்  முறையே 1,385 மற்றும் 1,307 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 117 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 


 

.