This Article is From Aug 05, 2020

சென்னையில் கொரோனா: ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரையிலான மண்டலவாரி ஆக்டிவ் கேஸ் விவரம்

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 89,969 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

சென்னையில் கொரோனா: ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரையிலான மண்டலவாரி ஆக்டிவ் கேஸ் விவரம்

சென்னையிலேயே அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 1,401 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

ஹைலைட்ஸ்

  • சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 86% பேர் மீண்டு வந்துள்ளனர்
  • இதுவரை சென்னையில் 2,022 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்
  • சென்னையில் இறப்பு விகிதம் 2.12 சதவீதமாக உள்ளது

தமிழகத்தில் நேற்று 5,063 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,023 பேர். ஒட்டுமொத்த அளவில் 2,68,285 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 6,501 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 2,08,784 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 55,152 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 108 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 4,349 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (05.08.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 423

மணலி - 89

மாதவரம் - 568

தண்டையார்பேட்டை - 645

ராயபுரம் - 796

திரு.வி.க நகர் - 952

அம்பத்தூர் - 1,401

அண்ணா நகர் - 1,198

தேனாம்பேட்டை - 804

கோடம்பாக்கம் - 1,349

வளசரவாக்கம் - 900

ஆலந்தூர் - 520

 அடையாறு - 1,012

பெருங்குடி - 484

சோழிங்கநல்லூர் - 482

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 233

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 89,969 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 86 சதவீத மீட்பு விகிம் ஆகும். 2,202 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 11,856 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 1,143 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 1,401 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்திலும் மற்றும் அண்ணா நகர் மண்டலத்திலும் முறையே 1,349 மற்றும் 1,198 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 89 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 

.