This Article is From Aug 13, 2020

சென்னையில் கொரோனா வைரஸ் நிலவரம்: ஆகஸ்ட் 13 ஆம் தேதி மண்டலவாரியாக விரிவான விவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 98,736 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Written by

மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 102 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

Highlights

  • சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 88% பேர் மீண்டு வந்துள்ளனர்
  • சென்னையில் தற்போது 10,953 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர்
  • சென்னையில் இதுவரை 2,370 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

தமிழகத்தில் நேற்று 5,871 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 993 பேர். ஒட்டுமொத்த அளவில் 3,14,520 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 5,633 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 2,56,313 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 52,929 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 119 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 5,278 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (13.08.2020) வருமாறு:

Advertisement

திருவொற்றியூர் - 293

மணலி - 102

Advertisement

மாதவரம் - 464

தண்டையார்பேட்டை - 592

Advertisement

ராயபுரம் - 769

திரு.வி.க நகர் - 677

Advertisement

அம்பத்தூர் - 1,475

அண்ணா நகர் - 1,151

Advertisement

தேனாம்பேட்டை - 701

கோடம்பாக்கம் - 1,303

வளசரவாக்கம் - 875

ஆலந்தூர் - 569

 அடையாறு - 1,048

பெருங்குடி - 442

சோழிங்கநல்லூர் - 453

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 39

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 98,736 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 88 சதவீத மீட்பு விகிம் ஆகும். 2,370 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 10,953 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 1,160 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 1,475 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்திலும் மற்றும் அண்ணா நகர் மண்டலத்திலும் முறையே 1,303 மற்றும் 1,151 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 102 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.


 

Advertisement