বাংলায় পড়ুন Read in English
This Article is From May 17, 2020

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தினை கடந்தது! முழு விவரம்!!

கடந்த 24 மணிநேரத்தில் 120 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 2,872 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement
இந்தியா Posted by

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 90 ஆயிரத்தினை கடந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தேசிய அளவில் இதுவரை தொற்றால் 90927 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,987 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 53,946 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 34,109 குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இன்று காலை நிலவரப்படி குணமடைந்தவர்களின் சதவிகிதம் 37.51 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத் போன்ற மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும், இந்த மாநிலங்களில்தான் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

Advertisement