இந்திய முழுவதும் 2900க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே செல்லும் போது துணிகளைக் கொண்டோ, அல்லது முகக்கவசங்களை கொண்டோ முகத்தினை மறைத்துக்கொள்ளுமாறு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தற்போது இந்தியாவில் 68 பேர் கொரோனா தொற்றால் இறந்திருக்கின்றனர்.
“தொற்று அறிகுறி இல்லாதவர்கள், கைகளால் தயாரிக்கப்பட்ட சாதாரண முகக்கவசங்களையே பயன்படுத்தலாம் என்றும், வெளியில் செல்லும்போது முகக்கவசங்களை பயன்படுத்துவதை கட்டாயமாக்கிக்கொள்ளுங்கள்” என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. வீட்டிலேயே, இருக்கும் சுத்தமான துணிகளைக் கொண்டு முகக்கவசம் தயாரிக்கலாம் என்று அரசு கூறியுள்ளது.
இவ்வாறு கைகளால் தயாரிக்கப்படும் முகக்கவசங்கள் சுகாதார பணியாளர்கள் மற்றும் தொற்று உள்ளவர்களோடு தொடர்பில் இருப்பவர்கள் இதனை பயன்படுத்தலாம். இவ்வாறாக பயன்படுத்தப்படும் முகக்கவசங்கள் ஒருவர் ஒன்று என்கிற விகிதத்தில்தான் பயன்படுத்தப்பட வேண்டும். உபயோகப்படுத்தப்பட்ட முகக்கவசங்களை மற்றவர்களுக்கு பகிரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக கொரோனா தொற்றானது, தொற்றுக்கு உள்ளான நபர்களிடம் இருந்து வெளியேறும் நீர்த் திவலைகள் மூலமாகவே பரவும் என்றும் அறியப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்தில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இந்த தொற்று காற்றின் மூலமாகவும் பரவுவதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருந்தனர். இதனால் அந்நாட்டில் மக்கள் அனைவரும் முகக்கவசங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தேசிய அளவில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 68 ஆக இருந்த நிலையில் தமிழகத்தில் இன்று காலை 52 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|