Read in English
This Article is From May 22, 2020

காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிக்கு கொரோனா தொற்று!

Coronavirus: நரேந்திர மோடி அரசுக்கு எதிராக தொடர்ந்து வீரியமாக கருத்து சொல்லி வருபவர் சஞ்சய்

Advertisement
இந்தியா Edited by

Coronavirus: “எனக்கு கோவிட்-19 பாசிட்டிவ் என பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது. அறிகுறிகள் இல்லாத வகையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

Highlights

  • சஞ்சய் ஜா, மும்பையில் வசித்து வருகிறார்
  • காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளராக உள்ளார் சஞ்சய்
  • ட்விட்டர் மூலம் தனத்து கொரோனா தொற்று இருப்பதை தெரிவித்துள்ளார் சஞ்சய்
Mumbai:

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா, தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதாக ட்விட்டர் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சொல்லும் சஞ்சய், மும்பையில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். 

“எனக்கு கோவிட்-19 பாசிட்டிவ் என பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது. அறிகுறிகள் இல்லாத வகையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த 10 முதல் 12 நாட்களுக்கு நான் வீட்டில் தனிமையில் இருக்க உள்ளேன். கொரோனா பரவும் முறையை தயவு செய்து குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். நம் எல்லோருக்கும் அது எளிதில் பரவக்கூடும். டேக் கேர்,” என்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார் சஞ்சய்.

அவரின் இந்த பதிவைத் தொடர்ந்து பல பிரபலங்கள், அவர் சீக்கிரம் குணமாகி வர வேண்டும் என்று கூறியுள்ளனர். 

கடந்த ஆண்டு சிவசேனா கட்சியிலிருந்து வெளியேறிய பிரியங்கா சதுர்வேதி, ‘சஞ்சய், நீங்கள் சீக்கிரமே குணமாகி வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நான் எதாவது உதவி செய்ய முடியுமென்றால் தெரியப்படுத்துங்கள்,' எனக் கூறியுள்ளார். 

நரேந்திர மோடி அரசுக்கு எதிராக தொடர்ந்து வீரியமாக கருத்து சொல்லி வருபவர் சஞ்சய். பல தேசிய செய்தி தொலைக்காட்சி சேனல்களின் விவாதங்களில் அவர் தொடர்ந்து பங்கேற்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement