இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000ஐ நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 50 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், நேற்றைய தினம் முதல் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வரும் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையானது இன்று காலை நிலவரப்படி, 19.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது, சராசரியாக ஒரு நாளைக்கு 618 நோயாளிகள் குணமடைந்து வருகின்றனர்.
இதனிடையே, நேற்று மாலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி மற்றும் நொய்டா இடையேயான எல்லையை மூடுவதாக உத்தரப் பிரதேச அரசு அறிவித்தது. டெல்லியில் 2,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், டெல்லி நாட்டிலே அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதியாக 3வது இடத்தில் உள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று கூட உள்ளது. இதில் பல்வேறு திட்டங்கள் குறித்து அமைச்சரவை முடிவு செய்ய உள்ளது.
கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள உதவும் ரேப்பிட் டெஸ்ட் கிட்டுகளால், 2 நாட்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
விரைவாக பரிசோதிக்க உதவும் ரேப்பிட் டெஸ்ட் கிட்டுகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும்போது, முடிவுகள் தவறாக வருவதாக ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்கள் புகார் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா (5,218), குஜராத் (2,178), டெல்லி (2,156), மற்றும் ராஜஸ்தான் (1,659)
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அறவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நடைமுறை குறித்து விசாரிக்க மேற்கு வங்கத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு மத்திய குழுவினர் மம்தா பானர்ஜி அரசால் கொல்கத்தாவுக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பு மணிக்கணக்கில் காத்திருக்க வைக்கப்பட்டனர்.
மகாராஷ்டிராவின் புனே, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், கொல்கத்தா, ஹவுரா, மிட்னாபூர் கிழக்கு, 24 பர்கானாஸ் வடக்கு, டார்ஜிலிங், கலிம்பொங் மற்றும் மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மற்றும் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மத்திய அரசின் அதிகாரிகள் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதில், பாஜக ஆட்சி செய்யும் ஒரே மாநிலம் மத்தியப் பிரதேசமாகும், அங்கும் மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பியுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த ஊடகம் ஒன்றில் 26 செய்தியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மொத்தமாக 94 பேருக்க சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து, முதலில் தொற்று ஏற்பட்டவர்களின் பெற்றோர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் மட்டும், செய்தித்தாள் மற்றும் பிற ஊடகத்தை சேர்ந்த 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் 25 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 1.77 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,751 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜான் ஹாப்கினஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|