Read in English
This Article is From Aug 01, 2020

கர்நாடகா அமைச்சர் பி.சி.பாட்டீலுக்கு கொரோனா தொற்று உறுதி!

இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, சோதனை முடிவுகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா

கர்நாடகா அமைச்சர் பி.சி.பாட்டீலுக்கு கொரோனா தொற்று உறுதி!. (File)

Bengaluru:

கர்நாடகா அமைச்சர் பி.சி.பாட்டீலுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, சோதனை முடிவுகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், பெங்களூரில் உள்ள எனது வீட்டில், வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், கோப்பல் மாவட்டத்திற்கு என்னுடன் ஆய்விற்கு வந்த ஐந்து அலுவலகர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, கடந்த 34 மணி நேரத்தில் மட்டும் கர்நாடகாவில் 5,483 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 84 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Advertisement

கர்நாடகாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 1,24,115 ஆக உள்ளது. இதில், 72,005 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 49,788 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதுவரை அங்கு மொத்தமாக 2,134 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement
Advertisement