This Article is From Apr 21, 2020

''ஏழைகளின் அரிசியிலிருந்து பணக்காரர்களுக்கு சானிட்டைசர் தயாரிப்பதா?'' - ராகுல் கேள்வி

நேற்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் கூடிய தேசிய எரிபொருள் ஒத்துழைப்பு கமிட்டி, குடோன்களில் அதிகப்படியாக இருக்கும் அரிசியை எத்தனால் தயாரிக்க பயன்படுத்தலாம் என முடிவு எடுத்துள்ளது. தேசிய உயிரி எரிபொருள் கொள்கையை காரணம் காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டது.

''ஏழைகளின் அரிசியிலிருந்து பணக்காரர்களுக்கு சானிட்டைசர் தயாரிப்பதா?'' - ராகுல் கேள்வி

பெட்ரோலிய அமைச்சகத்தின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • மத்திய அரசின் குடோன்களில் உணவுப்பொருள் அதிகம் உள்ளதாக தகவல்
  • அபரிமிதமான அரிசி சானிட்டைசர் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் :மத்திய அரசு
  • மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்
New Delhi:

மத்திய அரசின் குடோன்களில் அதிகப்படியாக இருக்கும் அரிசி, சானிட்டைசர் தயாரிக்க பயன்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. இதனை கண்டித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, 'ஏழைகளின் அரிசியிலிருந்து பணக்காரர்களுக்கு அரிசி தயாரிப்பதா' என மத்திய அரசை கேள்வி கேட்டுள்ளார். 

அரிசியல் உள்ள எத்தனால் கைகளை சுத்தம் செய்யும் சானிட்டைசர் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இதேபோன்று பெட்ரோல் பயன்படுத்தவால் ஏற்படும் புகையை குறைக்க அதனுடன் எத்தனால் கலக்கப்படும் என அரசு கூறியிருந்தது. இதற்கும் குடோன்களில் உள்ள அபரிமிதான அரிசி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் நிலையில், மக்கள் சிலர் பசியால் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'எப்போது இந்தியாவின் ஏழை மக்கள் விழித்துக் கொள்வார்கள்? ஏழைகள் பசியால் உயிரை விட்டுக் கொண்டிருக்க அவர்களுக்கான அரிசியில் இருந்து தயாரிக்கப்பட்ட சானிட்டைசரால் பணக்காரர்கள் சிலர் கைகளை கழுவிக் கொண்டிருக்கின்றனர்' என்று கூறியுள்ளார். 

நேற்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் கூடிய தேசிய எரிபொருள் ஒத்துழைப்பு கமிட்டி, குடோன்களில் அதிகப்படியாக இருக்கும் அரிசியை எத்தனால் தயாரிக்க பயன்படுத்தலாம் என முடிவு எடுத்துள்ளது. தேசிய உயிரி எரிபொருள் கொள்கையை காரணம் காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மத்திய அரசின் உணவுக் குடோன்களின் உணவுப் பொருட்கள் அதிகளவு இருந்தாலும், நாட்டில் நடைமுறைப்பட்டுள்ள ஊரடங்கால் ஏராளமானோர் பசியால் வாடி வருகின்றனர். 

பசிக்கொடுமையால் சொந்த ஊர்களுக்கு வெளிமாநில தொழிலாளர்கள் நடைபயணமாக ஊருக்கு திரும்புகின்றனர். வழியில் சிலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. 

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.