This Article is From Apr 21, 2020

“இந்தியாவும் அமீரகமும் எவ்வித பாகுபாடுமின்றி உறவினை கடைப்பிடித்து வருகின்றன”: இந்தியத் தூதர்

தப்லீக் ஜாமாத் நிகழ்வினை மையமாக வைத்து கொரோனா தொற்று பரவலுக்காக இஸ்லாமியர்களை அடையாளப்படுத்துவது குறித்து அமீரக அரச தலைவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் பாகுபாடுகளுக்கு எதிராக பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை பேசினார்.

New Delhi:

தேசிய அளவில் கொரோனா தொற்று 17 ஆயிரத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று பரவலுக்கு இஸ்லாமியர்கள்தான் காரணம் என பரவி வருகிற செய்தி ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்மறையான கருத்துகளை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் அந்நாட்டிற்காக இந்திய தூதர் பவன் கபூர், பிரதமர் நரேந்திர மோடி “கொரோனா தொற்றானது இனம், மொழி, சாதி, மதம், போன்ற பாகுபாடுகளைக் கவனத்தில் கொண்டு மனிதர்களை தாக்காது.” என்கிற கருத்தினை  மேற்கோள்காட்டி, “இந்தியாவும் அமீரகமும் எவ்வித பாகுபாடுமின்றி உறவினை கடைப்பிடித்து வருகின்றன. பாகுபாடு என்பது நமது தார்மீகத் துணிவுக்கும் சட்ட விதிக்கும் எதிரானது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்தியர்கள் இதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்” என கபூர் ட்விட் செய்திருக்கிறார்.

அமீரகத்தில், கொரோனா தொற்று பரவலுக்கு இஸ்லாமியர்கள்தான் காரணம் என பரவி வருகிற செய்தியானது அந்நாட்டு அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

57 முஸ்லீம் நாடுகளின் கூட்டமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) சுயாதீன நிரந்தர மனித உரிமைகள் ஆணையம் (IPHRC) சமீபத்தில், “இந்தியாவில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரங்கள் கடுமையான கண்டனத்திற்குரியது. கொரோனா வைரஸ் பரவலுக்கு இஸ்லாமியர்கள் குற்றம்சாட்டப்படுவது ஊடகங்களால் அதிகரித்து வருகிறது. மேலும், இந்தியாவில் வளர்ந்து வரும் இஸ்லாமோபோபியாவின் அலைகளைத் தடுக்கவும், சர்வதேச மனிதவள சட்டத்தின் கீழ் துன்புறுத்தப்பட்ட இஸ்லாமியச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.பி.எச்.ஆர்.சி இந்திய அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.” என சமீபத்தில் OIC-IPHRC ட்விட் செய்திருந்தது.

தப்லீக் ஜாமாத் நிகழ்வினை மையமாக வைத்து கொரோனா தொற்று பரவலுக்காக இஸ்லாமியர்களை அடையாளப்படுத்துவது குறித்து அமீரக அரச தலைவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா பரிசோதனைக்கு பிறகே மருத்துவமனையில் வேறு எந்த வித சிகிச்சையும் மேற்கொள்ள இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் விளம்பரம் செய்திருந்தது. இது பல்வேறு தளங்களில் கண்டிக்கப்பட்டதையடுத்து அந்த மருத்துவமனை நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சமூக ஊடகங்களில் வெளிவரும் தவறான, மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் காரணமாக சில குறிப்பிட்ட சமூகங்கள் இழிவுபடுத்தப்படுவதாக மத்திய அரசு சமீபத்தில் குறிப்பிட்டிருந்தது.

தனிமைப்படுத்துதல் மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள், இருப்பிடம் என அவர்களுடைய எவ்வித அடையாளங்களும் பொதுவெளியில் வெளியிட வேண்டாம் எனவும், தொற்று குறித்தான பயத்தினை குறைப்பது குறித்தும் மத்திய அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.

டெல்லி மாநாட்டினை மையமாக கொண்டு கொரோனா தொற்று பரவலுக்கு இஸ்லாமியர்கள் காரணம் என மக்கள் மத்தியில் பரப்பப்பட்ட தவறான தகவலுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக மத்திய அரசு மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.