This Article is From Jul 06, 2020

கொரோனா வைரஸூடன் நாம் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்: எடியூரப்பா

நமக்கு வேறு வழியில்லை, இந்த வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி கூட அதையே தான் கூறியுள்ளார். 

கொரோனா வைரஸூடன் நாம் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்: எடியூரப்பா

கொரோனா வைரஸூடன் நாம் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்: எடியூரப்பா

ஹைலைட்ஸ்

  • நாடு கொரோனா வைரஸூடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்
  • பிரதமர் நரேந்திர மோடி கூட அதையே தான் கூறியுள்ளார்.
  • கர்நாடகா மாநிலத்தில் 23,474 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Bengaluru:

வேறு வழியில்லாததால், நாடு கொரோனா வைரஸூடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பாபு ஜக்ஜீவன் ராமின் நினைவு நாளில், விதான சவுதாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் எடியூரப்பா கூறியதாவது, "நமக்கு வேறு வழியில்லை, இந்த வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி கூட அதையே தான் கூறியுள்ளார். 

நாம் ஆம்புலன்ஸ் அதிகரித்துள்ளோம், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். இது மிகவும் முக்கியமானது நம்மைப் பாதுகாக்க, "என்று அவர் கூறினார்.

மேலும், இந்த பரவலான நோயை எதிர்த்துப் போராட மாநில அரசு பல ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் அவர் கூறினார். 

மத்திய சுகாதார அமைச்சகம் அளித்த தகவலின் படி, கர்நாடகா மாநிலத்தில் 23,474 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 372 பேர் இந்த நோய்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

.