தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலம் கேரளமாகும். இம்மாநிலத்தில் சீனாவிலிருந்து திரும்பிய மாணவிக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், தற்போதைய நிலையில் கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதிலும் இறப்புகளைக் கட்டுப்படுத்துவதிலும் கேரளா முன்னணியில் உள்ளது.
தற்போது கேரளா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 447 ஆக உயர்ந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதிலும் உள்ள காவல்துறையினர், சுகாதார ஊழியர்கள், வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் பணியாளர்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் என அனைவருக்கும் சீரற்ற முறையில் நோய் எதிர்ப்பு பரிசோதனையை மேற்கொள்ள அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலமாக மாநில அளவில் கொரோனா தொற்று பரவல் சமூக பரவலாக பரினாமமடைந்துள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திவிட முடியும் என மாநில முதல்வர் பினராய் விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரிசோதனைகளில் கேரளா அடுத்தகட்டத்திற்கு தயாராகியுள்ளது. சமூகப்பரவல் உறுதிப்படுத்தப்படுமாயின், தொற்று பரவலின் மையத்தினை கண்டறிய முடியாது. இந்த நிலையில் கேரள அரசு மேற்கொள்ளவிருக்கக்கூடிய சோதனைகள் குறித்து விரிவாக அறிவிக்கப்படவில்லை.
கொரோனா தொற்று பரிசோதனை கருவிகளின் பற்றாக்குறைகளுக்கு மத்தியில் சில மாநிலங்கள் இதேபோல சீரற்ற சோதனைகளை மேற்கொண்டிருந்தன. இதேபோல இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சமீபத்தில் சுவாச நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சீரற்ற பரிசோதனையைத் தொடங்கியது. கடுமையான சுவாச நோயால்(SARI) பாதிக்கப்பட்டவர்களுக்குக்கும் சோதனைகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் தேசிய அளவில் கொரோன தொற்று சமூக பரவலை எட்டவில்லை உயர் மருத்துவ அமைப்பு ஆரம்பத்தில் கூறியது. ஆனால் இந்த சோதனைகளில் ஒரு சதவிகிதத்தினருக்கு தொற்று பரவல் மூலத்தினை சரியாகக் கண்டறிய முடியவில்லை.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆர்டி-பி.சி.ஆர் முறை மூலம் மேற்கொள்ளப்படும் சீரற்ற சோதனைகளைத் தவிர்த்துள்ளது. இந்த முறையானது அதிக செலவுடையதாக இருக்கும் என கவுன்சில் கருதுகிறது. மேலும், ஆய்வகங்களில் நடத்தப்படும் இந்த சோதனைகளில் முடிவுகளை கண்டறிய ஆறு மணி நேரம் தேவைப்படுகிறது.
முன்னதாக சில மாநிலங்களில் ரேபிட் டெஸ்ட் கருவி எனப்படும் விரைவு பரிசோதனைக் கருவிகள், மாறுபட்ட முடிவுகளை காட்டியதால் இக்கருவிகள் மூலமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநில அரசு ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவுகளை காட்டுகின்றதாகப் புகார் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் தீர்க்கப்படும் வரை ரேபிட் டெஸ்ட் கருவிகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு மாநில அரசுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மாநிலங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|