This Article is From May 25, 2020

உள்நாட்டு விமான சேவை துவக்கம்: தனிமைப்படுத்தல் கட்டாயமா? மாநிலங்களின் முடிவு என்ன?

நேற்றைய தினம் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 6,767 ஆக உயர்ந்துள்ளது.

உள்நாட்டு விமான சேவை துவக்கம்: தனிமைப்படுத்தல் கட்டாயமா? மாநிலங்களின் முடிவு என்ன?

Coronavirus: உள்நாட்டு விமான சேவை துவக்கம்: தனிமைப்படுத்தல் கட்டாயமா? மாநிலங்களின் முடிவு என்ன?(File)

New Delhi:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கு அறிவித்து, 2 மாதங்களுக்கு பின்னர் நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவைகள் இன்று காலை முதல் துவங்கியுள்ளது. விமான போக்குவரத்துகள் மீண்டும் துவங்கிய நிலையில் மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கவலை தெரிவித்துள்ளது. தொடர்ந்து, மாநிலத்திற்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்துவது குறித்து வழிமுறைகளையும் பல மாநிலங்கள் வெளியிட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையிலான நீண்ட கலந்துரையாடல்களுக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த வாரம் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்நாட்டு விமான சேவை துவக்கம் குறித்து தனது ட்விட்டர் பதிவில் அறிவித்திருந்தார். அதேபோல், பயணிகளை தனிமைப்படுத்தப்பட தேவையில்லை என்றும் அதில் தெரிவித்திருந்தார். 

விமான சேவை தொடங்குவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பாக, அவசர தேவைகளுக்கான விமானங்களுக்கு மட்டுமே மாநிலத்திற்குள் அனுமதி அளிக்கப்படும் என முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்தார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த கேபினெட் அமைச்சர் நவாப் மாலிக், மும்பை விமான நிலையத்தில் இருந்து 25 பயணிகள் விமான நிலையத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், தனிமைப்படுத்தல் நெறிமுறைகள் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. ஏற்கனவே அங்கு 50,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக வெளியில் இருந்து வருபவர்களால் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தீவிரமாக திட்டமிட்டு வருகின்றனர். 

இந்தியா முழுவதும் உள்நாட்டு விமான சேவை இன்று முதல் துவங்கும் என்று மத்திய அரசு  ஏற்கெனவே அறிவித்து இருந்தது. ஆனால் சென்னையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் ரயில் சேவை போன்று விமான சேவையும் தமிழகத்துக்கு வேண்டாம் என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. ஆனால், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து, விமான சேவைகளை தமிழகம் உட்பட நாடு முழுவதும் திட்டமிட்டபடி இன்று முதல் இயக்குவதில் உறுதியாக இருந்தது.

பயணிகள் மற்றும் விமான நிலையம் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், விமான நிலையத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக அனைத்து பயணிகளின் கைகளிலும் தனிமைப்படுத்தல் குறித்து அழியாத மை மூலம் சீல் வைப்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.  

டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 13,000ஐ நெருங்கியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் 231 ஆக அதிகரித்துள்ளது. எனினும், அறிகுறி இல்லாத பயணிகளை தனிமைப்படுத்தவில்லை என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது. பஞ்சாபில் அறிகுறி இல்லாத பயணிகளை 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலிலும், பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பயணிகளை தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டிலே முதலாவதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட கேரள மாநிலத்தில், விமான பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்திலும் இதேபோல், தனிமைப்படுத்தல் கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆம்பன் புயல் சேதம் காரணமாக அங்கு மே.28ம் தேதிக்கு பின்னர் தான் விமான சேவை துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்நாட்டு விமான பயணிகளை தனிமைப்படுத்த வேண்டிய தேவையில்லை என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் அறிவிப்பை தொடர்ந்து, முதலாவதாக அதனை அசாம் மாநிலமே ஏற்க மறுத்தது. அதன்படி, 14 நாட்கள் தனிமைப்படுத்தலை, சரிசமமாக பிரித்து, தனிமைப்படுத்தல் மையங்களில் பாதி நாட்களும், வீட்டில் பாதி நாட்களும் என அசாம் அரசு விதிமுறைகள் மேற்கொண்டுள்ளது.

மிசோரம் அரசு அம்மாநிலத்திற்கு வருவதற்கு அனுமதி வாங்க வேண்டும் என்று கூறியதோடு, கட்டாயம் கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

.